December 8, 2025, 5:58 PM
28.2 C
Chennai

நடிகர் ஆர்யா மீதான பண மோசடி வழக்கு: மேலாளரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

arya actor
arya actor

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூ.70.5 லட்சம் வரை பண மோசடி செய்ததாக, நடிகர் ஆர்யாவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார் மீதான வழக்கில், அவரது மேலாளர் முகமது அர்மானின் முன்ஜாமின் மனுவை சென்னை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஜெர்மன் குடியுரிமை பெற்ற வித்ஜா என்ற பெண், பிரதமர் மோடிக்கு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி இ-மெயில் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஹுசைனி, முகம்மது அர்மான் ஆகியோர் மூலம் நடிகர் ஆர்யா, அவரது அம்மா ஜமீலா ஆகியோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. தன்னை பிரபல நடிகர் என்று அறிமுகம் செய்து கொண்ட நடிகர் ஆர்யாவும், அவரது அம்மா ஜமீலாவும் என்னிடம் நெருங்கிப் பழகினர். ஒரு கட்டத்தில், நடிகர் ஆர்யா என்னை காதலிப்பதாகக் கூறினார். அதை நம்பி, நானும் அவரைக் காதலிக்கத் தொடங்கினேன். அப்போது, நடிகர் ஆர்யாவும், அவரது அம்மாவும் என்னிடம், குடும்பத்தில் உள்ள நிதிபிரச்னையைக் காரணம் காட்டி, என்னிடம் பண உதவி கேட்டனர்.

அவர்களது குடும்பத்தில் என்னையும் ஒருத்தி என்றும், என்னை வருங்கால மருமகள் என்றும் ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி ஆர்யாவுக்கு 80 ஆயிரம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 70.5 லட்சம்) வரை பணம் அனுப்பி வைத்தேன். அவர்களின் போலி வாக்குறுதியை நம்பி, அவர்களின் மோசடிக்கு நான் இரையாகி விட்டேன்.

ஆனால், நடிகர் ஆர்யா, ஷாயீஷா என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட பிறகு தான் நான் மோசடியாக ஏமாற்றப் பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றி பணம் பறித்த நடிகர் ஆர்யா, அவரது அம்மா உள்ளிட்ட நான்கு பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கோரியிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக, ஆர்யாவின் மேலாளர் முகம்மது அர்மான், சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ஆர்யா மீதான புகார் சென்னை சைபர் கிரைமிலிருந்து, சிபி-சிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு, முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி செல்வகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் வித்ஜா சார்பில் வழக்கறிஞர் பி. ஆனந்தன் ஆஜராகி, அர்மானுக்கு முன்ஜாமின் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பதால், நடிகர் ஆர்யாவின் மேலாளர் அர்மானின் முன்ஜாமின் மனுவை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories