ஸ்டுடியோவுக்குள் எல்லை மீறிய இயக்குநர் : அதிர்ந்த பாடகி!

sunitha
sunitha

பாடகி சுனிதா தெலுங்கில் மிகவும் பிரபலமானவர். இவருடைய குரலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பாடகர் மட்டுமின்றி சிறந்த டப்பிங்க் கலைஞரும் கூட.

இவர் தமிழில் ‘காதல் ரோஜாவே’ படத்தில் இளையராஜா இசையில் ‘நினைத்த வரம்’ என்ற பாடலையும், ‘பத்ரி’ படத்தில் ‘காதல் சொல்வது உதடுகள் இல்லை’ பாடலையும் பாடியுள்ளார்.

தற்போது பாடகி சுனிதா ஒரு இயக்குனருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த இயக்குனரின் பேச்சும் செயல்களும் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஒரு படத்திற்கு டப்பிங் பேச நான் ஒரு டப்பிங் ஸ்டுடியோவுக்கு சென்றேன். நான் உள்ளே நுழைந்தவுடன், படத்தின் இயக்குனர் ‘சுனிதா மேம், நான் உங்களுடைய பெரிய ரசிகன்.

இன்று நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார். மேலும் எனது படத்தில் நீங்கள் பணியாற்றுவது என் அதிர்ஷ்டம் என்கிறார்.

பின்னர் நான் சில காட்சிகளுக்கு டப்பிங் பேசிய உடன் சுனிதா காரு என்ற அழைக்கத் தொடங்கினார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் என்னை ‘சுனிதா’ என்று அழைக்கத் தொடங்கினார். பின்னர், நான் எனது வேலையை முடித்த பிறகு அம்மா, புஜ்ஜி, கண்ணா என்றவாறு அழைக்கத் தொடங்கிவிட்டார். எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வந்த போது மரியாதையுடன் பேசிய அவர் சிறிது நேரம் கழித்து எனக்கு செல்லப் பெயர் வைத்து கூப்பிடத் தொடங்கியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு நான் நீண்ட நேரம் மவுனமாக இருந்தேன்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரை ஒரு போதும் சந்திக்கவில்லை” என்று தெரிவித்தார். சுனிதா குறிப்பிட்ட அந்த இயக்குனர் யார்? என்ற பரபரப்பு டோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories