பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக்… கொரோனா பாதிப்பில் காலமானார்!

kalthoon thilak
kalthoon thilak

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (வயது 78) கொரோனாவால் சென்னையில் இன்று காலமானார்.

சென்னையில் வசித்து வந்த இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இவர் மே 7 இன்று உயிரிழந்தார்.

05.04.1943 அன்று பிறந்தவர். கல்தூண் திலக் என்று அழைக்கப் பட்ட இவரது இயற்பெயர் திலக் ராஜ். திலக்ஜி என்று அன்பர்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ‘கல்தூண்’ படத்தில் சிவாஜிகணேசன் -கே.ஆர்.விஜயா தம்பதியரின் இரண்டு மகன்களில் ஒருவராக வந்து வில்லத்தனத்தின் உச்சமாக நடித்திருப்பவர் என்பது அப்படத்தைக் கண்டுகளித்தவர்களுக்கு நினைவுக்கு வரலாம்.

kalthoon1
kalthoon1

இவர் டைகர் தாத்தாச்சாரி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வேலை கிடைச்சிருச்சு, அதிகாரி, கை நாட்டு, வெள்ளிக்கிழமை விரதம் [1974], ஆறிலிருந்து அறுபது வரை [1979] போன்ற 70 படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரி.கே.பகவதியின் மகனாக இவர் நடித்திருப்பார். ரஜினிகாந்திடம் மிகக் கடுமையாக இவர் நடந்து கொள்ளும்போது ரஜினிகாந்தின் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்படும்.

ஏவி.எம்.ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணியாற்றியவர். 24 படங்களுக்கு உதவி எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேல் திரைத்துறையில் இருந்தவர்.

kalthoon2
kalthoon2

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களில் துடுக்குத்தனம் நிறைந்த வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இவர் மேஜர் சுந்தரராஜனின் நாடக்குழுவில் நடித்து வந்தவர்.

கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் வில்லத்தனம் கலந்த வேடங்களிலேயே நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை சீரியல்களிலும், டிவி ஒன்றில் பழைய பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வந்தார்.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட அண்மைக் காலத்தில் மட்டும், தமிழ் சினிமாவில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இன்று கல்தூண் திலக்ஜி மறைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 COMMENT

  1. More than 50years we moved close as we were chennai telephones.he used to call me Gemini Gemini.Good actor and very bold.Dont care Master.Let his soul rest in peace.His wife also admitted.Pray almighty for speed recovry

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories