பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக்… கொரோனா பாதிப்பில் காலமானார்!

kalthoon thilak
kalthoon thilak

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (வயது 78) கொரோனாவால் சென்னையில் இன்று காலமானார்.

சென்னையில் வசித்து வந்த இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இவர் மே 7 இன்று உயிரிழந்தார்.

05.04.1943 அன்று பிறந்தவர். கல்தூண் திலக் என்று அழைக்கப் பட்ட இவரது இயற்பெயர் திலக் ராஜ். திலக்ஜி என்று அன்பர்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ‘கல்தூண்’ படத்தில் சிவாஜிகணேசன் -கே.ஆர்.விஜயா தம்பதியரின் இரண்டு மகன்களில் ஒருவராக வந்து வில்லத்தனத்தின் உச்சமாக நடித்திருப்பவர் என்பது அப்படத்தைக் கண்டுகளித்தவர்களுக்கு நினைவுக்கு வரலாம்.

kalthoon1
kalthoon1

இவர் டைகர் தாத்தாச்சாரி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வேலை கிடைச்சிருச்சு, அதிகாரி, கை நாட்டு, வெள்ளிக்கிழமை விரதம் [1974], ஆறிலிருந்து அறுபது வரை [1979] போன்ற 70 படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரி.கே.பகவதியின் மகனாக இவர் நடித்திருப்பார். ரஜினிகாந்திடம் மிகக் கடுமையாக இவர் நடந்து கொள்ளும்போது ரஜினிகாந்தின் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்படும்.

ஏவி.எம்.ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணியாற்றியவர். 24 படங்களுக்கு உதவி எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேல் திரைத்துறையில் இருந்தவர்.

kalthoon2
kalthoon2

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களில் துடுக்குத்தனம் நிறைந்த வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இவர் மேஜர் சுந்தரராஜனின் நாடக்குழுவில் நடித்து வந்தவர்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் வில்லத்தனம் கலந்த வேடங்களிலேயே நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை சீரியல்களிலும், டிவி ஒன்றில் பழைய பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வந்தார்.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட அண்மைக் காலத்தில் மட்டும், தமிழ் சினிமாவில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இன்று கல்தூண் திலக்ஜி மறைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 COMMENT

  1. More than 50years we moved close as we were chennai telephones.he used to call me Gemini Gemini.Good actor and very bold.Dont care Master.Let his soul rest in peace.His wife also admitted.Pray almighty for speed recovry

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories