December 23, 2025, 11:56 PM
25 C
Chennai

கடவுளைத் திட்டுகிறேன்.. பொருளாதார கஷ்டத்தில் புலம்பும் நடிகை!

suruthi
suruthi

நடிகை ஸ்ருதிஹாசன் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அப்பாவுடன் இல்லாமல் தனியாக பிளாட் வீடு ஒன்றை வாங்கி அதில் தனித்து வாழ்கிறார். ‘இந்தப் புதிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்காக தான் இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது.’ என்று ஒரு பேட்டியில் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

இது பற்றி ஸ்ருதிஹாசன் பேசும்போது, ‘இந்தக் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளை நடத்துவது சிக்கலாக உள்ளது.

கொரோனா தொற்று முடியும்வரையிலும் காத்திருக்கவும் முடியாது. முகக் கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கத்தில் இருப்பதும் இயலாத காரியம்.

surithi
surithi

மற்றவர்கள்போல் எனக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக நான் சுயமாகத்தான் சம்பாதித்து வருகிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனது அம்மாவிடமோ, அப்பாவிடமோ நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனது செலவுகளையும் நானேதான் கவனித்துக் கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்தக் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலுக்கு முன்பாக நான் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளேன். அதற்கு மாதத் தவணயைக் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அளவுகோலில் கடன்கள் உள்ளன. நானும் அப்படித்தான். இதற்காகவே நான் திரும்பவும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் கார், வீடெல்லாம் வாங்காமல் தப்பித்தவர்களை பாராட்டுகிறேன். நான் வாங்கிய உடனேயே இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் கடவுளைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.

லாக்டவுனை தனது புதிய ஆண்நண்பருடன் கழித்து வருகிறார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரபாஸூடன் ‘சலார்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ படம் மிக சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பரமன் அளித்த பகவத் கீதை! தொடர் – 2

பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்பகவத்கீதை...

Entertainment News

Popular Categories