December 6, 2025, 3:01 AM
24.9 C
Chennai

எங்க ஆட்சி.. நாங்க சொல்ற ஆளப் போடு.. அதிகாரிகளுக்கு மிரட்டல் விடும் கட்சியினர்!

Front field staff
Front field staff

அடையாறில், தொற்று தடுப்பு பணியில் உள்ள களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, ‘நாங்கள் கைகாட்டும் நபர்களை நியமிக்க வேண்டும்’ என, தி.மு.க.,வினர் மிரட்டுவதால், அதிகாரிகள் செய்வதறியாது திணறுகின்றனர்.

அடையாறு மண்டலத்தில், தினமும், 600 முதல், 700 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 175வது வார்டு, அடையாறில், 80 முதல், 100 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மண்டலத்தில் உள்ள, 13 வார்டில், 175வது வார்டு, அதிக தொற்றில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுகாதாரம், பொறியியல், வருவாய்த் துறை இணைந்து, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வார்டில், 90 களப்பணியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், கடந்தாண்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அனைவரும், அதிகாரிகள் உத்தரவுக்கு இணங்க, திறன்பட பணி புரிகின்றனர். அதற்கு ஏற்ப, பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அதே வார்டைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள் சிலர், ‘நாங்கள் அனுப்பும் களப்பணியாளர்களை நியமித்து, அ.தி.மு.க.,வினர் அனுப்பிய, நபர்களை வெளியேற்றுங்கள்’ என, மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர். அதற்கு, ‘கட்சிகள் பரிந்துரையில், களப்பணியாளர்கள் யாரையும் நியமிக்கவில்லை; முறையாக பயிற்சி வழங்கி நியமித்துள்ளோம்.

தொற்று தடுப்பு பணி சிறப்பாக நடக்கிறது. ‘உயிரை பணயம் வைத்து பணி புரிகின்றனர். தற்போதைய சூழலில், யாரையும் நீக்க முடியாது’ என, அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த சில நிர்வாகிகள், நேற்று முன்தினம் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் நுழைந்து, அதிகாரிகளுடன் தகராறு செய்துள்ளனர். ‘இப்போ நடப்பது எங்கள் ஆட்சி; 10 ஆண்டு, அ.தி.மு.க.,வினர் கூறியதை கேட்டீர்கள்; இனிமேல், நாங்கள் கூறுவதை தான் கேட்க வேண்டும். இல்லையென்றால், நடப்பதே வேறு’ என, மிரட்டி உள்ளனர்.

இது குறித்து, யாரிடம் புகார் அளிப்பது என, தெரியாமல், அதிகாரிகள் செய்வதறியாது திணறுகின்றனர்

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அனைவரும், உயிரை பணயம் வைத்து, ஓய்வு இல்லாமல் பணி புரிகிறோம். தொற்று குறைந்தால் தான், எங்களுக்கு நிம்மதி. அதற்கு ஏற்ப, களப்பணியாளர்களுக்கு பணி ஒதுக்கி, தடுப்பு நடவடிக்கை நடக்கிறது.

இருக்கும் நபர்களை மாற்றி, தி.மு.க.,வினர் கூறும் நபர்களை நியமித்தால், தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்படும். முதல்வர், கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கிறார். அவரது செயலுக்கு, கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தி.மு.க.,வினர் சிலரின் செயல் உள்ளது. அதுபோல் செயல்படுவோரை, கட்சி தலைமை கண்டித்தால் தான், தொற்று தடுப்பு பணியை தொய்வில்லாமல் செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories