December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

சீமானை எப்போ கைது பண்ணுவிங்க..? நொடியில் நடவடிக்கை நாடும் நடிகை விஜயலட்சுமி!

vijayalakshmi-video
vijayalakshmi-video

நடிகை சாந்தினி புகார் அளித்ததில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டது போல் தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதன் மூலம் அறியப்பட்டவர் நடிகை விஜயலட்சுமி.

அதேபோல சமிபத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் துறையில் புகார் அளித்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

தற்போது மணிகண்டன் மீது காவல்துறையினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.

seeman
seeman

இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி நடிகை சாந்தினி புகார் அளித்ததில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டது போல், தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் கடந்த நான்கு வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன் அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன்.

அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அமைச்சர் மணிகண்டன் அவர்கள் கைதாகும் பொழுது சீமான் அவர்கள் ஏன் கைதாகவில்லை என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்ட பொழுதும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் ஆனால் அந்த வழக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள் இதற்கு இயக்குனர் நடிகர் அமீர் உள்ளிட்டவர்களின் தலையீடு அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சீமான் அவர்களுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது எனவே இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் இதனை தெரிவிக்க போவதாகவும் கூறிய அவர் இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் பத்து வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன் இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories