வள்ளியூர் முருகன் கோயில் இடத்தில் கிறிஸ்துவ சர்ச் கட்டுமானம்: தடை கோரி இந்து முன்னணி மனு!

hindumunnai protest in valliyur - 2026

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில் இடத்தில் கிறிஸ்துவ சர்ச் கட்டுமானம் நடைபெறுவதை தடுத்து நிறுத்தக் கோரி, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான (சர்வே எண் 622, 623 1/A) இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தக் கோரி வள்ளியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மேலும், கிறிஸ்தவ சர்ச் நிர்வாகத்துக்கு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் துணை போகின்றனரா என்று இந்த போராட்டத்தின் போது, கேள்வி எழுப்பினர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ளதாக காவல்துறை, மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது.

hindumunnai protest in valliyur1 - 2026

இருப்பினும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில், முன்புறம் உள்ள மறைப்பை அகற்றாமல் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்று, டாக்டர் த.அரசுராஜா ( இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்) தலைமையில் வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணி மாநில துணைத் தலைவர்), பெரி.குழைக்காதர் (விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர்), வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் (இந்து முன்னணி மாநில செயலாளர்), எஸ்.தங்கமனோகர் (இந்துமுன்னணி கோட்ட தலைவர்), கே சக்திவேலன் (இந்து முன்னணி கோட்ட செயலாளர்) வழக்கறிஞர் கே.குமார முருகேசன் (பாஜக., மாவட்ட செயலாளர்), வழக்கறிஞர் ஏ.மதுசூதனன் (ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய தலைவர்), எஸ்.சிவராம குட்டி (பாஜக., வள்ளியூர் நகர தலைவர்) பிரமநாயகம் (இந்து முன்னணி நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர்), சுடலை (இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர்), எஸ்.வைத்தியநாதன் (இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்) உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து, கட்டுமானப் பணி உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் முன்பிருந்த மறைவுகள் அகற்றப்பட்ட பின்னர் போராட்டக்குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories