December 6, 2025, 3:34 AM
24.9 C
Chennai

பண மோசடி செய்து திருப்பி கேட்டால் கொலை செய்வதாக மிரட்டும் நடிகர்! பெண் புகார்!

rk suresh - 2025

ரூ. 1 கோடி பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே சுரேஷ் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி வீணா. கனரக வாகனங்கள் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்த ராம மூர்த்திக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு கமலக்கண்ணன் என்பவரின் மூலம், திரைப்பட நடிகர் ஆர்.கே. சுரேஷின் ராமமூர்த்தி – வீணா தம்பதிக்கு கிடைத்துள்ளது.

அப்போது நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் பெற்று தருவதாகவும், இதற்கு கமிஷனாக ஒரு கோடி தரவேண்டும் என கூறியுள்ளார்.

இதை நம்பிய ராமமூர்த்தி ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்கில் ரூபாய் 93 லட்சமும், நேரடியாக ரூபாய் 7 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இருவரையும் அழைத்து சென்ற ஆர்.கே.சுரேஷ் அங்கு வங்கி மேலாளர் முன்னிலையில் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

அப்போது, நிரப்பப்படாத காசோலைகளிலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் இவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

இதையடுத்து வங்கி வங்கி மேளாளர் சக்திவேல் 10 கோடி ருபாய் கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் வரும் என கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளார்.

ஆனால் அவர்களின் வங்கி கணக்கிற்கு 10 கோடி ரூபாய் வரவில்லை. இது குறித்து ஆர்.கே.சுரேஷிடம் வீணாவும், ராமமூர்த்தியும் கேட்ட போது மிரட்டும் தொனியில் பேசியதுடன், பணம் தரமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமமூர்த்தி மன உளைச்சலில் உயிரிழந்துள்ளார். இதன்பின்னர், வீணா, தனக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை கேட்டு பலமுறை ஆர்.கே.சுரேஷ்-ஐ அணுகியுள்ளார்.

ஆனால் ஆர்.கே. சுரேஷ் உன்னையும் உனது மகளையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே. சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள வீணா, ஆர். கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒரு கோடி ரூபாயை மீட்டு தரவேண்டும் எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories