தாயும் மகளும் ஒரே மின்விசிறியில் தற்கொலை!

dead - 2026

காஞ்சிபுரத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 28வார்டு மாகாளியம்மன் தெருவில் வசிக்கும் அன்பு என்பவர் தனது மனைவி ரேணுகா (வயது44) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

மூத்த மகள் சங்கீதா (வயது21) தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இளைய மகள் புவனா (வயது17) ஆன்லைன் வகுப்பில்12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் அன்புவின் மனைவி ரேணுகா கடந்த 10மாத காலமாக மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுடன் அவதிபட்டு வந்துள்ளார்.

அதனால் அவ்வப்போது தனது இளைய மகள் புவனாவை அழைத்து கொண்டு மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை தனது கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஜாக்கெட் போன்ற துணி மணிகளை தைத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அன்பு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது முன்கதவு உள்ளே தாழிட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் பதில் இல்லாததால் அன்புவின் அண்ணன் மகனான கோபியை ஜன்னல் வழியே பார்த்திட கூறியுள்ளார்.

கோபி ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது தாயும் மகளும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அலறினார்.

உடனே கோபியும்,அன்பும் சேர்ந்து முன்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி ரேணுகாவும், இளைய மகள் புவனாவும், ஒரே கம்பியில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இவர்கள் அலறிய சத்தத்தினை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். தாயும், மகளையும் தூக்கிலிருந்து இறக்கி வைத்து விட்டு விஷ்ணு காஞ்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணவர் அன்பு மற்றும் சுற்று வட்டாரத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட ரேணுகா எங்கே சென்றாலும் இளைய மகள் புவனாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு செல்வார்.

இந்நிலையில் தன்னுடைய சாவிலும் இளைய மகள் புவனாவை தவிக்கவிடாமல் ஒரே நேரத்தில் தனது மகளையும் அழைத்து சென்றது அப்பகுதி மக்கிடையே பெரும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories