தாயும் மகளும் ஒரே மின்விசிறியில் தற்கொலை!

dead - 2026

காஞ்சிபுரத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 28வார்டு மாகாளியம்மன் தெருவில் வசிக்கும் அன்பு என்பவர் தனது மனைவி ரேணுகா (வயது44) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

மூத்த மகள் சங்கீதா (வயது21) தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இளைய மகள் புவனா (வயது17) ஆன்லைன் வகுப்பில்12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் அன்புவின் மனைவி ரேணுகா கடந்த 10மாத காலமாக மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுடன் அவதிபட்டு வந்துள்ளார்.

அதனால் அவ்வப்போது தனது இளைய மகள் புவனாவை அழைத்து கொண்டு மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை தனது கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஜாக்கெட் போன்ற துணி மணிகளை தைத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அன்பு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது முன்கதவு உள்ளே தாழிட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் பதில் இல்லாததால் அன்புவின் அண்ணன் மகனான கோபியை ஜன்னல் வழியே பார்த்திட கூறியுள்ளார்.

கோபி ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது தாயும் மகளும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அலறினார்.

உடனே கோபியும்,அன்பும் சேர்ந்து முன்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி ரேணுகாவும், இளைய மகள் புவனாவும், ஒரே கம்பியில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இவர்கள் அலறிய சத்தத்தினை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். தாயும், மகளையும் தூக்கிலிருந்து இறக்கி வைத்து விட்டு விஷ்ணு காஞ்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணவர் அன்பு மற்றும் சுற்று வட்டாரத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட ரேணுகா எங்கே சென்றாலும் இளைய மகள் புவனாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு செல்வார்.

இந்நிலையில் தன்னுடைய சாவிலும் இளைய மகள் புவனாவை தவிக்கவிடாமல் ஒரே நேரத்தில் தனது மகளையும் அழைத்து சென்றது அப்பகுதி மக்கிடையே பெரும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories