முகத்தில் மிளகாய்ப்பொடித் தூவி செயின் பறிப்பு!

chain snatching
chain snatching

பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் தூளை தூவி தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜீவா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் ஜீவா தனது கடையில் இருந்தபோது அங்கு 2 இளைஞர்கள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து ஜீவா அந்த இளைஞர்கள் குடிப்பதற்காக தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்து அதனை ஒருவர் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு இளைஞர் தனது பாக்கெட்டில் கையை விட்டு மிளகாய்த்தூளை அள்ளி திடீரென ஜீவாவின் முகத்தில் தூவி உள்ளார்

அதன்பிறகு அந்த 2 இளைஞர்களும் ஜீவாவை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்கும் போது அவர் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் அந்த 2 இளைஞர்களும் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஆனாலும் அவர்கள் அந்த இளைஞர்களை விடாமல் துரத்திச் சென்று ஒருவரை மட்டும் பிடித்த போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதனையடுத்து அவர்கள் அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு காவல்துறையினர் இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராஜாஜி காலனி பகுதியில் வசிக்கும் மனோஜ் என்பது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு காவல்துறையினர் மனோஜ் திருடிச் சென்ற தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற இன்னொரு இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories