thavalagirishwar temple
thavalagirishwar temple

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1400 அடி மலை உள்ளது இந்த மலை உச்சியில் தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையாரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
திருக்கோயிலில் உள்ள பிள்ளையார் கோயிலும் உள்ளது.

தவளகிரீஸ்வரர் கோயிலில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பல்லவ மன்னன் 3ஆம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் எட்டாம் நூற்றாண்டின் பல்லவர்கள் காலத்தில் இந்தத் தலம் சிறப்பிடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

இதில் வெண்குன்றம் கிராமத்து சபை பற்றிய குறிப்புகளும் காணப்படுகிறது. ஒரு பக்கம் தெலுங்கு மொழியிலும், மறுபக்கம் சமஸ்கிருத மொழியிலும், பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டிலிருந்து விஜயநகரப் பேரரசர்கள் காலத்திலும் இத்தலம் சிறப்பாக விளங்கியதையும் திருப்பணிகள் நடந்தேறியதையும் அறிய முடிகிறது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலல் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவது போன்று தவளகிரீஸ்வரர் கோயிலும் கார்த்திகை தீபத் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்திற்கு எழுந்தருளுவார்.

பின்னர் மலைக் கோயிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீசப் பெருமானுக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் இதர மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம் சுற்றுவட்டாரத்தில் 10 கி.மீ. தூரத்துக்குத் தெரியும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசித்து அருள் பெறலாம்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட கோவிலின் பிள்ளையார் கோயிலின் கோபுரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இடித்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பிள்ளையார் கோயில் கோபுரத்தை இடித்த அடையாளம் நபர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தவாசி – காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோபுரத்தை இடித்தது நபர்களை உடனடியாக கைது செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு ஆகிய வீடியோவை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விநாயகர் கோயிலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கோபுரத்தை இடித்ததுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending