December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

இரட்டை பிள்ளைங்க.. என்று சொல்லி 2 பெண்களை திருமணம் செய்து மோசடி!

Vincent 1 - 2025

திரைப்படங்களில் வருவது போல் டபுள்-ஆக்ட் (இரட்டை வேடம்) செய்து 21 வயது இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய ஏமாற்றுக்காரனை போலீசார் கைது செய்ய தேடி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவன் வில்லாண்டர் பெனட் ராயன். இவன் போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். இவனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், இவன் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனத்தில், இவன் உடன் பணிபுரிந்து வந்த ஆவடியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தை முடித்துள்ளான்.

இதற்கிடையே, அந்த 21 வயது இளம் பெண்ணிடம், அவரின் தோழிகள் ‘ஏற்கனவே திருமணம் முடிந்தவரை இரண்டாவதாக ஏன் திருமணம் செய்து கொள்கிறாய்?” என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் வில்லாண்டர் பெனட் ராயன் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரித்துள்ளார்.

Vincent - 2025

அப்போது அதற்கு வில்லாண்டர் பெனட் ராயன், “அது நான் அல்ல, எனது அண்ணன் வின்சென்ட். நாங்கள் இரட்டை பிறவிகள். அவருக்கு திருமணம் முடிந்து தற்போது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்போம்” என்று திரைப்பட பாணியில் கதை அளந்து உள்ளார்.

மேலும், தான் அளந்துவிட்ட அந்த கதையை நம்ப வைக்க, தனது திருமணத்தின் போது மனைவி, தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தில், வேறு தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து அந்த இளம் பெண்ணிடம் காண்பித்துள்ளார்.

இதைவிட உச்சகட்டமாக இரட்டைப் பிறவிகள் என்பதற்கு போலியான ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றையும் தயாரித்து காண்பித்துள்ளார். ஆனால், இதனை நம்பாத அந்த இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனால் திருமண நிச்சயதார்த்தத்தின் போது வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பணத்தை திருப்பிக் பெண்வீட்டார் கேட்டுள்ளனர்.

அப்போது ஒரு லட்சத்தை மட்டும் கொடுத்த ராயன் மீதி பணத்தை பிறகு தருவதாக தெரிவித்துள்ளான். ஆனால் மீதி பணத்தை தராமல் அந்த இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அந்த இளம்பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தலைமறைவாகியுள்ள ராயன் மற்றும் அவனின் தயை கைது செய்ய தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories