கணவரின் முதல் மனைவியின் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை!

veni
veni

குடியாத்தத்தில் குழந்தை இல்லாத விரக்தியில் கணவரின் முதல் மனைவியின் பிள்ளைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த சித்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் பெயின்டர் சேட்டு (35). இவரது மனைவி ஈஸ்வரி. 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

இதனால், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வேணி (29) என்பவரை சேட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சேட்டு தினசரி காலை 5.30 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவார். இதனால், ஈஸ்வரியின் பிள்ளைகளுக்கு சித்தி வேணி பாதுகாவலராக இருந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஒரு மாதமாக சேட்டுவின் முதல் மனைவியின் 8 வயதுடைய மகனை வேணி, அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு 8 வயது சிறுவனை வேணி சூடு வைத்து சித்ரவதைசெய்துள்ளார். இதை, அதே பகுதியில் உள்ள பெரியம்மா மரியா என்பவரிடம் சிறுவன் தெரிவித்து அழுதுள்ளார்.

சிறுவனுக்கு உடலில் பல இடங்களில் சூடு கொப்புளம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மரியா, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்தார்.

அதன்பேரில், நகர காவல் ஆய்வாளர் லட்சுமி விரைந்து சென்று விசாரணை செய்தார். அதில், இரண்டு திருமணம் செய்தும் குழந்தை பிறக்காத விரக்தியில் இருந்த வேணி, 8 வயது சிறுவனை சூடு வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, வேணியை காவல் துறையினர் கைது செய்து, சிறுவனை அவரது பெரியம்மா மரியா பராமரிப்பில் இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories