December 6, 2025, 5:44 PM
29.4 C
Chennai

லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது!

fake money
fake money

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக ஆர்.கலைச்செல்வி (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், மற்றும் அந்தோணி யாகப்பா ஆகியோர் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.

அதில், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும் ஏற்கனவே பதிவு செய்து ஆர்.சி.புக் வாங்க இரு வாகனங்களுக்கு 4,500 ரூபாயும் லஞ்சமாக தர வேண்டும் என புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாகவும், லஞ்சம் தர விரும்பாததால் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த புகாரினை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பட்டுக்கோட்டைக்கு சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.

அப்போது 4,500 ரொக்கப்பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.

அந்த பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும், அலுவலகத்திலேயே வைத்து, யார் யாரிடம் பணத்தை பெற்றுள்ளார்கள். அந்த பணத்தை என்ன செய்தார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

மேலும் அவரிடமிருந்து லஞ்சப் பணம் 4,500 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில் பட்டுக்கோட்டையிலுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் நேரிடையாக பணத்தை வாங்கமாட்டார்.

அதற்கென்றுள்ள புரோக்கர் மூலம் வாங்கி, மாலையில் செல்லும் போது பெற்றுக்கொள்வார். இந்த அலுவலகத்தில் பதிவு செய்யும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சமாக பணம் கொடுத்தால், தான் பணிகள் விரைவில் நடைபெறும்.

பைக் முதல் கனரக வாகனம் முதல் 300 முதல் 5 ஆயிரத்திற்கு மேல் தினந்தோறும் லஞ்சமாக பணம் வசூலிக்கப்படுகிறது. வாகன விற்பனையாளர்கள், வாகனத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட பணத்தை கொடுத்து விடுவார்கள்.

அது மட்டும் இல்லாமல், வாகனத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கேற்றார் போல் பணம் வசூலிப்பார்கள்.

பட்டுக்கோட்டையில் எந்த பணிகளாக இருந்தாலும், பணம் இல்லை என்றால், நடைபெறாது என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

தற்போது புகார் கொடுத்தவர்களிடம் கறாராக பணத்தை கேட்டதால், வேறு வழியின்றி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகாரளித்துள்ளனர்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள போக்குவரத்து அலுவலத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்யவேண்டும், புரோக்கர்கள் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories