வீடு தேடி வந்து உதவி கேட்டு புற்றுநோயாளி ரசிகர்! சிகிச்சை செலவை ஏற்ற நடிகர்!

chiranchivi
chiranchivi

தனது ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை நடிகர் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’, மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’, மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26.10.21) அன்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் ரசிகரான வெங்கட் என்பவர் சிரஞ்சீவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சிரஞ்சீவியைச் சந்தித்த அவர் தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்தும், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளப் போதுமான வசதி இல்லை என்றும் அவரிடம் கூறியுள்ளார்.

வெங்கட்டின் நிலையை அறிந்த சிரஞ்சீவி அவருடைய சிகிச்சை செலவுக்குத் தான் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், அவருடைய மருத்துவ அறிக்கைகளை வாங்கிப் பார்த்த சிரஞ்சீவி, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த ரசிகரின் உடனடி சிகிச்சை செலவுக்காக ரூ.2 லட்சத்தையும் சிரஞ்சீவி கொடுத்துள்ளார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு சிரஞ்சீவி தனது அலுவலக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் உதவி குறித்து செய்தியாளர்களிடம் வெங்கட் கூறும்போது, ”அவரது ரசிகனாக இருப்பது ஆசிர்வாதம். இந்த ஜென்மத்தில் என்னால் சிரஞ்சீவிக்குப் போதுமான நன்றி தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்.

பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு சிரஞ்சீவிக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories