சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோயிலில் கொள்ளை! பண்ருட்டியில் பெரும் பரபரப்பு!

kovil undilal
kovil undilal

கும்பாபிஷேகம் நடந்தது 20 நாட்களே ஆன அய்யனார் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே வீரசிங்கன் குப்பத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அப்பகுதியைச் சேர்ந்த அய்யாகண்ணு என்பவர் இருந்து வந்துள்ளார்.

இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கோவிலில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை கோவிலைத் திறந்த அய்யாக்கண்ணுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலில் கிரில் கம்பிகளுக்கு நடுவில் கட்டியிருந்த உண்டியலை மர்ம நபர்கள் வெளியில் இருந்து உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பலர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கோவில் தர்மகர்த்தா அய்யாகண்ணு முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கு பதிந்து தடயங்களை சேகரித்தனர்.

கோவில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து அவர்களிடமிருந்து கோவில் பணத்தை மீட்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories