April 27, 2025, 2:42 AM
29.6 C
Chennai

மீண்டும் வாலிபம் கொள்ளப் போகிறதா வாலி..?

Ajith
Ajith

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவில் நிஜ நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இதனையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, “வாலி” படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது.

அஜித் – சிம்ரன் நடிப்பில் எஸ்.ஜே. சூர்யா 1999ஆம் ஆண்டு இயக்கிய படம் வாலி. இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித் ஒரு வேடத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக நடித்திருப்பார்.இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் எஸ். ஜே. சூர்யாவுக்கு இது முதல் படமாகும்.முதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு தடம் பதித்த சூர்யா அதன் பிறகு தமிழில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக ஆனார் என்பது அனைவரும் அறிந்தது.

ALSO READ:  Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

இந்நிலையில் வாலி படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை, அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூர் கைப்பற்றியிருக்கிறார்.

ஆனால் வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு போனி கபூருக்கு தடை விதிக்க வேண்டுமென எஸ்.ஜே. சூர்யா நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஆனால் வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என போனிகபூருக்கு அனுமதி அளித்து எஸ்.ஜே. சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து வாலி ரீமேக்குக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம் இதற்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா தாக்கல் செய்த வழக்கில், ‘படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமை கதையை எழுதியவருக்கே இருக்கிறது’ என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories