காஷ்மீரில் சுற்றி திரிந்த 3 பயங்கரவாதிகள் கைது!

Published:

Terrorist - 2026

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த 3 பங்கரவாதிகளையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், கையெறி குண்டு, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.

பிடிபட்ட பயங்கரவாதிகள் மூவரும் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img