விடியலில் கருத்து சுதந்திரம் இருந்தால்… புத்திசாலி போலீஸ்கார ‘சேகர்’கள் பலர் வெளிச்சத்துக்கு வருவார்கள்!

si sekar suspend - 2026

தன் மனத்தில் தோன்றிய உண்மையைப் போட்டுடைத்ததற்காக, சமூக வலைதளங்களில் அவதூறுக் கருத்துக்களைப் பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரை பணியிட நீக்கம் செய்துள்ளார்கள்.

தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சேகர், தற்போது சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் உள்ளார். இவர் அண்மையில் ‘பேஸ்புக்’ வலைதளத்தில் தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.

அதில் சேகர், ‘தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5௦௦௦ ரூபாய் கொடுக்கச் சொன்னான். வந்தா அதை காணோம். அதை கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்தி மொழியில் பேசியதை எதோ புரிஞ்ச மாதிரி, சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை’ என பதிவு செய்திருந்தார்.

பிரதமர் மோடி கருப்புப் பண ஒழிப்பு தொடர்பில் ஒரு முறை பேசிய போது, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டால், நாட்டில் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடலாம், அந்த அளவுக்கு நம் நாட்டின் ஊழல்வாதிகள் கருப்புப் பணத்தை அங்கே தேக்கி வைத்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், அதை மோடி ரூ.15 லட்சம் கொடுப்பதாகச் சொன்னார் என்று காங்கிரஸ், திமுக., பிரசாரம் செய்தது. அதையே திமுக.,வினர் சமூகத் தளங்களில் அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது. அதைக் குறிப்பிட்டு, காவல் உதவி ஆய்வாளர் சேகர், ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். ஆனால் அவர் அளித்த நேர்மையான பதில், தமிழக அரசின் மீதான அவதூறு பிரசாரம் என்று குற்றம் சாட்டியிருக்கிறது தமிழக காவல்துறை.

தமிழக காவல் துறைக்கும் காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து காவலர் இப்படி பதிவு செய்வது நியாயமா என திமுக.,வைச் சேர்ந்த ஒருவர் ‘பேஸ்புக்’கில் கேள்வி எழுப்பி இருந்தார். இதை அடுத்து, அந்தக் கேள்வி பரிமாற்றம் விரிவடைந்துள்ளது.

இதை அறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் உதவி ஆய்வாளர் சேகர் கருத்து பதிவிட்டது சர்ச்சைக்குரியது என்று தீர்மானித்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories