2022 பட்ஜெட்டை போனில் லைவ்வா பார்க்கலாம்: அறிமுகமான ஆப்!

budget - 2026

இந்த ஆண்டு முதல் அனைவரும் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மொபைலில் நேரலையில் பார்க்கலாம்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் நேரலையில் பார்க்கலாம்.

இதற்காக ஒரு ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை (Parliament of India) சபாநாயகர் ஓம் பிர்லா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த பயன்பாட்டில் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன, அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஓம் பிர்லா தனது ட்விட்டர் பதிவில், “குடியரசின் 73 ஆண்டுகால பயணத்தில் நமது நாடாளுமன்ற அமைப்புகள் தொடர்ந்து செழித்திருக்கின்றன. நமது இறையாண்மையுள்ள பாராளுமன்றம் குடிமக்களை சட்டமியற்றும் முறையுடன் இணைக்க பல முயற்சிகளை எடுத்துள்ளது.

தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள், இனி ‘டிஜிட்டல் பார்லிமென்ட்’ செயலி (‘Digital Parliament’ app) மூலம், கைப்பேசியிலும் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்

‘டிஜிட்டல் பார்லிமென்ட்’ செயலியில், பார்லிமென்டின் இரு அவைகளின் நடவடிக்கைகள், அவைகளின் அன்றாட அலுவல்கள் பற்றிய தகவல்கள், அவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் தகவல்கள் என அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் கூறினார்.

1947 முதல் இப்போது வரை பட்ஜெட் மீதான விவாதங்களும் இந்த செயலியில் (‘Digital Parliament’ app) கிடைக்கும். இந்த செயலியைப் பதிவிறக்குவதன் மூலம், மக்கள் தங்கள் மொபைல் திரையில் 2022 பட்ஜெட்டை நேரடியாகப் பார்க்கலாம்.

அரசின் கொள்கை முடிவுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றாலும், பொது நலனுக்காக உறுதியளிக்கும் பொறுப்பும் உள்ளது. அதே நேரத்தில் அரசாங்கத்தின் பணிகளைப் பற்றிய தகவல்களை வைத்திருப்பது ஒரு பொறுப்பான குடிமகனின் அடையாளம் என்று சபாநாயகர் கூறினார். .

இந்த செயலி இலக்கை நிறைவேற்றுகிறது, பாராளுமன்றத்தின் விவாதங்கள் முதல் வரவிருக்கும் பட்ஜெட் (Budget 2022) வரை அனைத்தும் இதில் கிடைக்கும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதை நேரலையில் பார்க்கலாம்.

பட்ஜெட்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பார்லிமென்ட் செயலியின் உதவியுடன், பொது பட்ஜெட்டை மக்கள் நேரடியாகப் பார்க்க முடியும். டிஜிட்டல் இந்தியாவின் சகாப்தத்தில் கொண்டு வரப்பட்ட இந்த செயலி ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.

இதில் பாராளுமன்ற நடவடிக்கைகளையும் காணமுடியும் என்பதால், மக்கள் தங்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசுவதை நேரடியாக மொபைலில் பார்க்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories