ஆண்டாள் நாச்சியார் அவமானப் படுத்தப் பட்ட போது செய்தி கேட்டு கண்ணீர் வடித்த நாட்டுப் புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பத்மஸ்ரீ விருது பெறுவது தாயின் கருணை என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவர் தனது டிவிட்டர் பதிவில், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருது பெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் நாகசாமி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில்…
ஆண்டாள் நாச்சியார் அவமானப்படுத்தப்பட்ட செய்தி கேட்டு ஊண் உறக்கம் இன்றி ஆண்டாள் நாச்சியாரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த திருமதி. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. என்னே தாயின் கருணை. ஆண்டாள் திருவடி சரணம்.
— H Raja (@HRajaBJP) January 25, 2018
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மவிபூஷன் விருதும், திருமதி விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
— H Raja (@HRajaBJP) January 25, 2018
தொல்லியல் துறை ஆய்வாளர்Dr.நாகஸ்வாமி அவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்படுகிறது. தொல்லியல் துறை நிபுணர் மட்டுமன்றி நம் கலாச்சாரம் பண்பாட்டு விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சமீபத்தில் அவர் எழுதி வெளியிட்டுள்ள Thirukkural An Abridgement of Sastras என்கிற புத்தகம் simply superb
— H Raja (@HRajaBJP) January 26, 2018