வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!

money - 2026

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை இரண்டு ஆண் அணில் குரங்குகள் திருடுபோய்விட்டதாகப் பூங்கா நிர்வாகம் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. அதில் ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சமீபகாலமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட இரண்டு ஆண் அணில் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை அலுவலர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு ஆண் அணில் குரங்குகளும் காணாமல் போயின. மேலும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அணில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை வெட்டிவிட்டு இரண்டு அணில் குரங்குகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், பூங்கா வனசரக அலுவலர்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் அரியவகை அணில் குரங்குகள் திருடுபோனது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல் துறை உயிரியல் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்தனர்.

இதையடுத்து அரியவகை அணில் குரங்குகளைத் திருடிச் சென்ற நபர்களைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இரண்டு அணில் குரங்குகளும் வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்லவிடாமல் தடுக்க விமான நிலையம், துறைமுகங்களில் காவல் துறை தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காணாமல்போன அந்த இரண்டு அரியவகை அணில் குரங்குகளின் முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும், வால் பகுதி முதல் கழுத்துவரை அணில் உடலமைப்பையும் காணப்படும்.

இந்த அணில் குரங்கு அரியவகை என்பதால் பன்னாட்டுச் சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படும். குரங்குகள் காணாமல்போனது குறித்து பூங்கா தரப்பிலும் விசாரணை மேற்கொண்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories