February 22, 2026, 10:11 AM
26.1 C
Chennai

வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!

money - 2026

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை இரண்டு ஆண் அணில் குரங்குகள் திருடுபோய்விட்டதாகப் பூங்கா நிர்வாகம் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. அதில் ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சமீபகாலமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட இரண்டு ஆண் அணில் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை அலுவலர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு ஆண் அணில் குரங்குகளும் காணாமல் போயின. மேலும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அணில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை வெட்டிவிட்டு இரண்டு அணில் குரங்குகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், பூங்கா வனசரக அலுவலர்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் அரியவகை அணில் குரங்குகள் திருடுபோனது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல் துறை உயிரியல் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்தனர்.

இதையடுத்து அரியவகை அணில் குரங்குகளைத் திருடிச் சென்ற நபர்களைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இரண்டு அணில் குரங்குகளும் வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்லவிடாமல் தடுக்க விமான நிலையம், துறைமுகங்களில் காவல் துறை தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காணாமல்போன அந்த இரண்டு அரியவகை அணில் குரங்குகளின் முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும், வால் பகுதி முதல் கழுத்துவரை அணில் உடலமைப்பையும் காணப்படும்.

இந்த அணில் குரங்கு அரியவகை என்பதால் பன்னாட்டுச் சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படும். குரங்குகள் காணாமல்போனது குறித்து பூங்கா தரப்பிலும் விசாரணை மேற்கொண்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories