December 5, 2025, 4:14 PM
27.9 C
Chennai

வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!

money - 2025

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை இரண்டு ஆண் அணில் குரங்குகள் திருடுபோய்விட்டதாகப் பூங்கா நிர்வாகம் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. அதில் ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சமீபகாலமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட இரண்டு ஆண் அணில் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை அலுவலர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு ஆண் அணில் குரங்குகளும் காணாமல் போயின. மேலும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அணில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை வெட்டிவிட்டு இரண்டு அணில் குரங்குகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், பூங்கா வனசரக அலுவலர்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் அரியவகை அணில் குரங்குகள் திருடுபோனது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல் துறை உயிரியல் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்தனர்.

இதையடுத்து அரியவகை அணில் குரங்குகளைத் திருடிச் சென்ற நபர்களைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இரண்டு அணில் குரங்குகளும் வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்லவிடாமல் தடுக்க விமான நிலையம், துறைமுகங்களில் காவல் துறை தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காணாமல்போன அந்த இரண்டு அரியவகை அணில் குரங்குகளின் முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும், வால் பகுதி முதல் கழுத்துவரை அணில் உடலமைப்பையும் காணப்படும்.

இந்த அணில் குரங்கு அரியவகை என்பதால் பன்னாட்டுச் சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படும். குரங்குகள் காணாமல்போனது குறித்து பூங்கா தரப்பிலும் விசாரணை மேற்கொண்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories