December 6, 2025, 2:32 AM
26 C
Chennai

ஆட்சிக்கு வந்து 9 மாதகாலம்.. வாக்குறுதி என்னாச்சு..? ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

teacher 1 - 2025

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் என மாதம் 12 நாட்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தொகுப்பூதியமாக முதலில் ரூ.5 ஆயிரம், பிறகு ரூ.7,700 என்றும், தற்போது ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

வேறு பணி கிடைத்தது போன்ற காரணங்களால் சிலர் விலகிய நிலையில், தற்போது சிறப்பு ஆசிரியர்களாக 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குமாறு அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது மாவட்ட அளவிலும், சென்னை டிபிஐ அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கு.சேசுராஜா, மாநில செயலாளர் கு.நவீன், மாநில பொருளாளர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்கள். பலர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா கூறியதாவது:

எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தை கொண்டு எப்படி வாழ்க்கை நடத்த முடியும். பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று 2016 மற்றும் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 12,500 பேரையும் விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக, டிபிஐ வளாகத்திலும், அதன் 3 நுழைவுவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories