ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

Hacker - 2026

இணைய உலகில் புதிய மால்வேர் வலம் வருகிறது. இது உங்கள் சமூக வலைதளங்களை குறித்து வைத்து தாக்குகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எப்போதுமே மால்வேர் என்றால், அது தர்ட் பார்டி சாஃப்ட்வேர் அல்லது ஆப் மூலமாக நடைபெறும் என்பதே பரவலான கருத்து. ஆனால், இந்த மால்வேர் என்பது உலகெங்கிலும் எண்ணற்ற யூசர்கள் பயன்படுத்தி வரும் மைக்ரோசாஃப் ஆப் உள்ளேயே ஊடுருவி வருகிறது.

இந்த மால்வேர் உங்கள் டிவைசுக்குள் எப்படி நுழைகிறது, எப்படி தாக்குதலை தொடுக்கிறது என்பது குறித்து தற்போதைய ஆய்வு முடிவுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

அதேசமயம், டெம்பிள் ரன் மற்றும் சப்வே சர்ஃபர் போன்ற ஆப்களிலும் இந்த மால்வேர் ஊடுருவி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த இரண்டு ஆப்களுமே மிக பரவலாக பயன்படுத்தும் கேம் ஆப்கள் ஆகும்.

வாழ்வில் ஒருமுறையேனும் இதை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும் அல்லது குறைந்தபட்சம் அதுகுறித்து கேள்வி பட்டிருப்பீர்கள்.

உங்கள் டிவைஸ் மால்வேர் மூலமாக பாதிக்கப்பட்டால், அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை அது கட்டுக்குள் கொண்டு வரும் என்ற எச்சரிக்கை தான், நாம் அதுகுறித்து அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை குறித்து உணர்த்துகிறது.

தற்போது கவலைக்குரிய விஷயம் என்ன என்றால், உலகெங்கிலும் உள்ள 5,000 டிவைஸ்களை இது ஏற்கனவே தாக்கிவிட்டது என்பதுதான். சிஸ்டம் மட்டுமல்லாது ஃபேஸ்புக், கூகுள் ஆகிய அக்கவுண்ட் மீதுதான் இது குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது.

இந்த மால்வேர் தாக்கினால், உங்கள் அக்கவுண்ட் உள்ளே தானாக அது லாகின் ஆகி, பிறரது பதிவுகளுக்கு லைக் அல்லது வேறு ரியாக்‌ஷன் கொடுக்க தொடங்குகிறது. குறிப்பாக, ஜிமெயில் மீது தாக்குதல் நடத்தி, அதில் உள்ள காண்டாக்ட்களை இது அழித்து விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மைக்ரோசாஃப் நிறுவனம் தடுக்குமா

மால்வேர் குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம், அதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப் ஆப் ஸ்டோரில் இது ‘ஆல்பம் பை கூகுள் ஃபோட்டோஸ்’ என்ற பெயரில் ஒளிந்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

இதையடுத்து, இந்த மால்வேரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய சூழலில், அன்நோன் சோர்ஸ்களில் இருந்து எந்தவொரு அட்டாச்மெண்ட் மற்றும் ஆப்ஸ் போன்றவற்றை யூசர்கள் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

யூசர்கள் தங்களை அறியாமலேயே மால்வேர் கொண்ட சோர்ஸ் மீது நம்பிக்கை கொண்டு பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களது சிஸ்டம்களை இது பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, யூசர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories