மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் 9ம் தேதி துவக்கம்! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!

Published:

madhurai - 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.
கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேசங்கள் எதுவும் பதிவு செய்து நடத்திட இயலாது. என‌ மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.
பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு வரும் 18ம் தேதியன்று நடைபெறுகிறது. 18ம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை 10 மணிக்கு மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செல்லூர், வைகை வடக்கரையில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்தும் பின் மாலை சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயில் வருகின்றனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை நடத்தப்படுகிறது. எனவே, உற்சவ நாட்களான வரும் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் பதிவு செய்து நடத்திட இயலாது. இவ்வாறு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img