இந்த நாய்க்கு இருக்கும் மனம் இங்கு பல பாய்ஸ்க்கு இல்லை!

Published:

dog 2 - 2026

நாய் ஒன்று வாத்தின் மீது வைத்துள்ள பாசத்தினால் எஜமானிடம் செய்யும் செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்று நாய். இந்த வீடியோவில் வரும் நாய் ஒன்று, தனது வீட்டில் வளர்க்கப்பட்டுவரும் வாத்தினை அதன் உரிமையாளர் வெட்ட முற்படும்போது, அதனை காப்பாற்ற செய்யும் காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டில் இறைச்சி தேவைப்படும் நிலையில் வளர்த்த நாய் முன் வாத்தின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றுள்ளார் . இதைப் பார்த்த நாய், தன் எஜமானர் வாத்தின் கழுத்தில் கத்தி வைத்ததுமே அதை தன் காலால் தடுத்து நிறுத்தி, கத்தியை தன்வாயால் பிடிங்கி கொண்டு போய் வேறு ஒரு இடத்தில் வைக்கிறது.

சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாய்க்கு இருக்கும் இந்த கருணை, இரக்க மனம் இங்கு பல பாய்ஸுக்கு இல்லை… மனித விலங்குகள் பல விலங்குகளை துன்புறுத்தி இன்பம் காண்பதை நாம் கண்டிருக்கிறோம்.. மேலும் சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொலை செய்யும் கொடூர புத்தி படைத்த சமுதாயம் பெருகி வருவது வேதனையளிக்கிறது.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

Related articles

Recent articles

spot_img