பயணிகள் கவனித்திற்கு.. தெற்கு இரயில்வே அறிவிப்பு!

train service - 2026

ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில் போக்குவரத்து உள்ளது.

இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைந்த விலையில், தங்களின் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் ரயில் பயணம் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இதற்கான பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில் ரயில் பயணத்தில் பயணிகள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை மற்றும் அபராதத்தை தெற்கு ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது,

ரயில் பயணத்தின் போது பயணச்சீட்டு அல்லது பாஸ் இல்லாமல் பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டப் பிரிவு 138ன் படி அப்போது வரை பயணித்த தூரம் அல்லது ரயிலானது புறப்பட்ட நிலையத்திலிருந்து வசூலிக்கப்படும் பயணக்கட்டணம், அபராதமாக செலுத்த வேண்டும். இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 லிருந்து வசூலிக்கப்படுகிறது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

மேலும் ரயில் பயணத்தின்போது தேவையில்லாத காரணத்திற்காக அலாரம் சங்கிலியை இழுத்தால், அவர்களுக்கு விதி 141ன் கீழ், 1000 ரூபாய் அபராதம் அல்லது 12 மாத சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டால் விதி 155 (அ) இன் படி 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டுமே சேர்த்து விதிக்கப்பட்டு உள்ளது.

ரயிலின் மேற்கூரையில் பயணிகள் பயணம் மேற்கொண்டால் விதி 156 இன் கீழ் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படுகிறது.

ரயிலில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தால், 145 (b)ன் கீழ் ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதேபோல் குப்பைகளை ரயிலில் கொட்டினால் சட்டப்பிரிவு 145 (b) இன் படி ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

மேலும் அங்கீகரிக்கப்படாத பொருள்களை ரயிலில் விற்பனை செய்து வந்தால், சட்டப்பிரிவு 144ன் படி ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories