ஏடிஎம், நெட்பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு.. SBI எச்சரிக்கை மெசேஜ்!

sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதி பாதிப்புகள் குறையும் வகையில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது.

அந்த வகையில், SBI வங்கி சமீபத்தில், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது.

உங்கள் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 உதவிக் குறிப்புகளை நீங்கள் எப்போதும் பிறப்பற்ற வேண்டும் என்று SBI அறிவித்துள்ளது.

நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் இதோ.

  1. ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது உங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருப்பது சிறந்தது.
  2. உங்கள் கார்டு சரியாக ATM இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் மற்றும் இயந்திரத்தில் அல்லது அதைப் பற்றி சந்தேகத்திற்குரிய சாதனம் எதுவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  3. உங்கள் கையால் கீபோர்டை மறைத்து உங்கள் பின் நம்பரை உள்ளிடவும். யாரும் உங்கள் PIN நம்பரை பார்க்க முடியாத படி பார்த்துக்கொள்வது உங்களின் கடமையாகும்.
  4. உங்கள் PIN நம்பரை அவ்வப்போது மாற்றம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.
  5. உங்கள் வங்கி கணக்கு அறிக்கையைத் தொடர்ந்து கண்காணிப்பது பாதுகாப்பானது. வங்கி அறிக்கையில் ஏதேனும் திடீர் மாற்றம் இருந்தால் உடனே வங்கியை நேரில் சென்று அணுகவும்.

இதேபோல் சமீபத்தில், எஸ்பிஐ வங்கி அதன் ஆன்லைன் நெட் பேங்கிங் பயனர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அதிலும் சில முக்கிய பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கும் படி SBI எச்சரித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் பாதுகாப்பைப் பலப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட புதிய எச்சரிக்கை அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி (SBI), சைபர் குற்றத்திலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிமுறைகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சேவையை வழங்கிவரும் SBI, தனது வாடிக்கையாளர்கள் வலுவான பாஸ்வோர்டுகளை பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கியுள்ளது.

வலுவான பாஸ்வோர்டுகளின் அவசியம் என்ன என்பதையும் பற்றி விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் பாஸ்வோர்டை தனித்துவமாகவும் வலுவானதுமாக மாற்ற எஸ்பிஐ கூறும் இந்த 8 செயல்முறையைப் பின்பற்றுங்கள். முதலில் உங்கள் பாஸ்வோர்டை யாராலும் உடைக்க முடியாத பலமான பாஸ்வொர்டாக மாற்றம் செய்ய சில முக்கிய விஷயங்களை நீங்கள் பின்பற்றியிருக்க வேண்டும்.

இதை நீங்கள் சரியாகச் செய்திருந்தால் சைபர் கிரைம் குற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று SBI கூறியுள்ளது. பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று SBI வங்கி தனது டிவிட்டர் வழியாக #SafeWithSBI! என்று இந்த தகவலை ட்வீட் செய்தது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

எஸ்பிஐ ஆன்லைன் நெட் பேங்கிங் வாடிக்கையாளர்கள் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து ஆகிய இரண்டின் கலவையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு aBjsE7uG என்று கேப்ஸ் மற்றும் ஸ்மால் ஆங்கில எழுத்துக்களைச் சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எண்கள் மற்றும் சிம்பல்கள் இரண்டையும் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு AbjsE7uG61!@ என்பது போன்ற எண்கள் மற்றும் சிம்பல்கள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.

போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய ஒருவர் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு aBjsE7uG என்று 8 எழுத்துக்களின் கலவையைப் பயன்படுத்தலாம்.

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பொதுவான அகராதி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உதாரணத்திற்கு இட்இஸ்லாக் (itislocked) அல்லது திஸ் இஸ் மை பாஸ்வேர்ட் (thisismypassword) என்று பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று SBI கூறியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் “qwearty” அல்லது “asdfg” போன்ற மறக்கமுடியாத மற்றும் மிகவும் பொதுவான கீ-போர்டு பாதைகளைப் பயன்படுத்தக்கூடாது. SBI வாடிக்கையாளர்கள் 12345678 அல்லது abcdefg போன்ற வெளிப்படையான பாஸ்வோர்டுகளை வைத்திருக்கக்கூடாது என்று SBI வங்கி எச்சரித்துள்ளது.

இவை எல்லாம் மிகவும் எளிதான பாஸ்வோர்ட் என்பதனால் உங்கள் நெட் பேங்கிங் பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் DOORBELL அல்லது DOOR8377 போன்ற யூகிக்க எளிதான மாற்றுகளைப் பயன்படுத்துவதும் தவறானது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாஸ்வோர்டை நீண்டதாக வைத்திருக்க அறிவுறுத்துகிறது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அதேபோல், நெட் பேங்கிங் பயனர்கள் அவர்களின் குடும்பம் தொடர்பான தகவல் மற்றும் பிறந்த தேதியுடன் பாஸ்வோர்டை உருவாக்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு Ramesh@1967 என்று பயன்படுத்தக் கூடாது.

இந்த 8 முக்கிய வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி உங்களின் நெட் பேங்கிங் பாஸ்வோர்டு தரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வோர்டை இந்த அறிவுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் பாஸ்வோர்ட் எவ்வளவு பலமானதாக உள்ளது என்பதைச் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

SBI வெளியிட்டுள்ள இந்த பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பைத் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் விழிப்புடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று SBI தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

Entertainment News

Popular Categories