திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம்.. கவனம் ஈர்த்த நெல்லை மாணவி!

nellai - 2026

நெல்லையில் பள்ளி மாணவி ஒருவர் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நெல்லையில் 5-வது பொருநை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், மொழி, பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, மகாலட்சுமி என்ற மாணவி வரைந்துள்ள திருக்குறள் ஓவியம், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1,330 திருக்குறள் மூலம், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.

நெல்லை சங்கர் நகரைச் சேர்ந்த மகாலட்சுமி. 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கெரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றும் நோக்கில், ஓவியம் வரையப் பழகியுள்ளார்.

இதேபோல், அரசுப்பள்ளி ஆசிரியை தயாரித்த கையடக்க திருக்குறள் புத்தகமும், கண்காட்சியில் கவனம் பெற்றுள்ளது.

புதுக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் பொன் ரேகா, பிராமி எழுத்துக்கள் மூலமாக திருக்குறளை கையடக்க புத்தகத்தில் எழுதியுள்ளார்.

திருக்குறளின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில், இந்த முயற்சியில் ஈடுபட்டதாக ஆசிரியை பொன்.ரேகா கூறியுள்ளார்.

புத்தகத் திருவிழாவுக்கு வருவோர் புத்தகங்களை வாங்கி தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்வதோடு, திருக்குறள் ஓவியம், கையடக்க திருக்குறள் புத்தகம் போன்றவற்றை பார்க்கும்போது, இதுபோன்ற சாதனை படைக்க உந்து சக்தியாக விளங்கும் என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories