10 ஆம் வகுப்பிற்கு 12 ஆம் வகுப்பு வினாத்தாள்! அதிர்ந்த மாணவர்கள்.. அதிருப்தியில் ஆசிரியர்கள்!

- 2026

சேலத்தில் நேற்று நடந்த, 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு, பிளஸ் 2 வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தமிழகம் முழுவதும், 10ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த முறை திருப்புதல் தேர்வு போன்று, வினாத்தாள் லீக் ஆகாமல் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வு நாளன்று காலையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து, அருகில் உள்ள பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று, 10ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதற்காக, சேலம் கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து, அருகில் உள்ள, 15 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டது.

அதில், 10ம் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள்களுக்கு பதில், நடந்து முடிந்த பிளஸ் 2 வேதியியல் பாட வினாத்தாள்கள் இருந்தன. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, வினாத்தாள்கள் வழங்குவதை நிறுத்தினர்.

கல்வித்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆங்கிலவழி வினாத்தாள்கள் மீண்டும், 10:35 முதல், 11:00 மணிக்குள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.

வினாத்தாள்களை சரிபார்க்காமல், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தின் மீது, ஆசிரியர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories