சீனியர் சிட்டசன்ஸ்: லோயர் பர்த் பிரச்சனைக்கு.. ஐஆர்சிடிசி தகவல்!

train service - 2026

ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ரயில் பயணத்தில், டிக்கெட் மற்றும் பெர்த் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

பயணத்தின் போது கீழே இருக்கும் லோயர் பெர்த் தேவைப்படும் நபராக நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் பலமுறை டிக்கெட் முன்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கான கோரிக்கை விடுத்த பிறகும் கீழ் பெர்த் கிடைக்காத நிலையும் ஏற்படுவதுண்டு. இதனால் அவர்களுக்கு பயணத்தில் சிரமங்கள் ஏற்படுகின்ன.

ஆனால் இப்போது நீங்கள் லோயர் பெர்த் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. லோயர் பர்த் கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்வது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் பயணி ஒருவர் இந்திய ரயில்வேயிடம் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனை பற்றி கூறி, இது ஏன் நடக்கிறது என கேள்வி எழுப்பி, இதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து, அவர், ‘சீட் ஒதுக்கீட்டின் லாஜிக் என்ன? நான் மூன்று மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் முன்னுரிமையில் டிக்கெட் புக் செய்திருந்தேன்.

அப்போது 102 பெர்த்கள் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு மிடில் பெர்த், அப்பர் பெர்த் மற்றும் சைட் லோயர் பர்த்களே கிடைத்தன. நீங்கள் இதை சரி செய்ய வேண்டும்.’ என எழுதியிருந்தார்.

இதற்கு இந்திய ரயில்வே ட்வீட் மூலம் தனது பதிலை தெரிவித்தது.

ஐஆர்சிடிசி-யின் பதில் என்ன?

இந்தக் கேள்விக்கு ஐஆர்சிடிசி ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. ஐஆர்சிடிசி தனது பதிலில், ‘ஐயா, லோயர் பெர்த்கள்/மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டு பெர்த்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தனித்து அல்லது இருவராக பயணிக்கும் போது (ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் நியமங்கள் பொருத்து) இது கிடைக்கும்.’ என தெரிவித்தது.

இரண்டுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இருந்தாலோ, அல்லது, ஒருவர் மூத்த குடிமக்கள் பிரிவிலும், மற்றவர் அந்த பிரிவில் வராமல் இருந்தாலும், முன்பதிவு அமைப்பு இதை கருத்தில் கொள்ளாது என்றும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories