எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆங்கில ஆசிரியர் முபாரக்!

Mubarak - 2026

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படிக்கின்ற எட்டாம் வகுப்பு சிறுமி கடந்த வியாழக்கிழமை தனது தந்தை இங்கே நிற்பதாக வீட்டிற்கு வேனில் சென்ற போது பாதியிலேயே இறங்கியுள்ளார்.

ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்ற காரணத்தால் பள்ளிக்கு சென்று பெற்றோர் விசாரித்தபோது, அவர்கள் விபரம் கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் பள்ளியில் பணியாற்றி வரும் முபாரக் என்ற ஆங்கில ஆசிரியர் வியாழக்கிழமையில் இருந்து பள்ளிக்கு வரவில்லை என்று தெரியவந்தது.

பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் முபாரக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

சிறுமியிடம் காதலிப்பதாக அவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார் என்பது காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை அறிய அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பள்ளியில் படிக்கும் ஆசிரியரே இப்படி மாணவியை சீரழிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் முபாரக் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories