புதுதில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப் பேசினார். தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியான நிலையிலும், பீகார் அரசியலில் நிலவும் குழப்ப நிலை குறித்தும் விவாதிப்பதற்காக அவர் சோனியாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, நிதிஷ் குமார் தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பீகார் அரசியல் நிலவரம் குறித்து லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

