December 23, 2025, 5:42 PM
28.8 C
Chennai

வேதாரண்யத்தில்  உப்பு சத்தியாக்கிரக போராட்ட குழுவினர் மௌன நிகழ்வு..

வேதாரண்யத்தில்  உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின்  நினைவு யாத்திரையில் பங்கேற்ற  குழுவினருடன் காங்கிரஸார் இன்று அடையாள மௌனம் கடைப்பிடித்தனர்.நாளை வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது.

இந்தியாவில் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு இந்த ஆண்டு சிறப்பான வகையில் கொண்டாடப்படுகிறது.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு யாத்திரை முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஏப்.13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கியது.

இந்த குழுவினர் 232 கிலோ மீட்டர் தொலைவை நடைபயணமாக மேற்கொண்டு வியாழக்கிழமை  இரவு வேதாரண்யம் வந்தடைந்தனர்.இந்த  குழுவினர் இன்று  காலையில் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் அடையாள மெளனம் மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மெளனத்தில்,முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி., பி.வி. ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார் பங்கேற்றனர்.

இரவு உப்புத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்  பேரணி பொதுக் கூட்டம்  நடைபெறுகிறது.இதில்,அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ்,அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாத்திரை குழுவினருடன் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது.இந்த குழுவினர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காலை 7 மணிக்கு அகஸ்தியம் பள்ளி நினைவு தூண் வளாகத்தில் உப்பு அள்ளும் நிகழ்வு நடைபெறும்.

IMG 20220429 WA0029 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பரமன் அளித்த பகவத் கீதை! தொடர் – 2

பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்பகவத்கீதை...

Entertainment News

Popular Categories