சாத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது-பொதுமக்கள் மறியல்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் இன்று சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது. காவல்துறையினரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் பட்டாசு தொழிலில் பல்வேறு விதிகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படும் வேண்டும் என்று நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் அறிவிப்புகள் அறிவித்த நிலையில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து விஜயகரிசல்குளம் பகுதியில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் சோதனை செய்தபோது ரவிக்கண்ணன் (34) என்பவர் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது விஜயகரிசல்குளம் கிராம பொதுமக்கள் ரவி கண்ணனை கைது செய்து அழைத்துச் செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டனர். போலீஸ் வாகனத்தை செல்லவிடாமல் சாலைகளில் குப்பை தொட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் மற்றும் வெம்பக்கோட்டை ஆய்வாளர் சுந்தரபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். அதன்பின்னர் காவல்துறையினர் ரவி கண்ணனை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் விஜயகரிசல்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவிக்கண்ணன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக விஜயகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories