ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா..

Published:

காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா விமர்சையாக இன்று நடந்தது. பல்லாயிர கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

ஸ்ரீபெரும்புதூரில் மிகவும்  பழமை வாய்ந்த  பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்  மற்றும் பாஷிய காரா சாமி என ராமானுஜருக்கு கோயில் உள்ளது. வைணவ சமயத்தை தோற்றுவித்த மதங்களில் புரட்சி செய்த மகான் ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்ததும் இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சித்திரை திருவிழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம். இதனால் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். 

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி ஆதிகேசவ பெருமாளுக்கு  கொடியேற்றத்துடன் துவங்கி 10-நாள் சித்திரை திருவிழா நடை பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 25-ம் தேதி துவங்கி ராமானுஜருக்கு 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ராமானுஜர் தங்க பல்லக்கு, யாழி வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், குதிரைவாகனம், சூரிய பிரபை வாகனம் சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

முக்கிய விழாவாக இன்று திருதேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தனிசனம் செய்தனர். இந்த தேர் திருவிழாவுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலதில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

images 75 - 2026
202205041023279777 Sri Ramanujar Thiruder Bhavani SECVPF - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img