துப்பாக்கியால் சுட்டு திருமண வரவேற்பு..! மணமக்கள் மீது வழக்கு பதிவு!

Published:

marriage 1 - 2026

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மணமகன் மற்றும் மணமகள் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஆரவாரங்களோடு ஊர்வல காரில் ஏறி அமர்ந்துள்ளார்கள்.

இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க கார் ஊர்வலமாக சென்ற நிலையில் மணமகனும், மணமகளும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கை துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர்.

இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த ஒரு சிலர் ஆரவாரம் செய்த நிலையில் ஒரு சிலர் தலைதெறிக்க ஓடிவிட்டனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீசார் மணமகன் மற்றும் மணமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூடுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என மீரட் காவல் கண்ணாகணிப்பாளர் கேசவ் குமார் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img