உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,” உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எதிர் வரும் போட்டிகளிலும் இது தொடர வேண்டும்,” என்றார். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். உங்களை எண்ணி பெருமை அடைகிறோம்,’ என, தெரிவித்துள்ளார். இதே போல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி,” பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர்கள் செயல்பாடு பாராட்டுக்குரியது,” என்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்,” இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. இது நம்பிக்கையை தந்துள்ளது,” என்றார். இதனிடையே, இந்திய அணி இன்று பெற்ற வெற்றியை பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கோலி சாதனை: பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில், சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் கோலி. மேலும், இதற்கு முன் அதிக ரன்கள் எடுத்த சச்சின் (98 ரன், 2003) சாதனையையும் முறியடித்தார். இந்திய பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிய உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வருக்குப் (101 ரன், 2003) பின்னர், சதம் அடித்த இரண்டாவது வீரர் கோலி.
Congratulations Indian Team on victory in ICC World Cup’s first match; wish you continued success in coming matches #PresidentMukherjee — President of India (@RashtrapatiBhvn) February 15, 2015
Congrats Team India. Well played. We are all very proud of you. — Narendra Modi (@narendramodi) February 15, 2015


