ஒத்த ஜாடையில் ட்வின்ஸ் பார்த்து இருப்பீங்க.. ட்ரிப்ளெட்ஸ் பார்த்து இருக்கீங்களா..?

babies - 2026

உலகில் 20 கோடி நபர்களில் ஒருவருக்கு பிறக்கக் கூடிய ஐடெண்டிக்கல் ட்ரிப்ளெட்ஸ் (identical triplets) எனப்படும் ஒரே மாதிரியான மூன்று குழந்தைகளை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவித்துள்ளார்.

ஜாரா அமிராபடி எனும் 28 வயது இப்பெண், ரோயா, அதினா மற்றும் செஃபியா எனப்படும் தன் மூன்று குழந்தைகளை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பிரசவித்தார். இந்த ட்ரிப்ளெட்களை 12ஆவது வார ஸ்கேனின் போது இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜாரா அவரது கணவர் அஷ்ரஃப் இருவரது குடும்ப வம்சாவளியிலும் இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ள நிலையில், இருவரும் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் தான் பிறக்கும் என வேடிக்கையாக பேசியபடி ஸ்கேன் செய்ய சென்றுள்ளனர்.

ஆனால், இவர்களது ஸ்கேன் முடிவுகளில் தன் வயிற்றில் இரண்டல்ல மூன்று குழந்தைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்த ஜாரா ஆச்சரியத்தில் உறைந்துள்ளார்.

முன்னதாக இரண்டு ஒரே மாதிரியான ஆண் குழந்தைகளும் , ஒரு பெண் குழந்தையும் பிறக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் 17ஆவது வார ஸ்கேனின் போது தான் மூன்று பெண் குழந்தைகள் என்பதை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

மேலும், இந்தக் குழந்தைகள் பிறந்ததும் அச்சு பிசகாமல் ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து உடனடியாக அவர்களை சோதனை செய்து பார்த்ததாகவும், அதன்படி, மூவரும் ஒரே மாதிரியான உருவத்தைக் கொண்டிருக்கும் ட்ரிப்ளெட் குழந்தைகள் எனக் கண்டறிந்ததாகவும் ஜாரா தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று குழந்தைகளும் தற்போது ஜாராவின் வீட்டில் வளர்ந்து வரும் நிலையில், ஜாராவின் சகோதரிகளும், சகோதரரும் குழ்ந்தைகளை மாறி மாறி பார்த்துக் கொண்டுள்ளனர்.

‘குழந்தைகள் மூவரும் இரவில் நீண்ட நேரம் தூங்குவதால் இப்போதைக்கு எந்தத் தொல்லையும் இல்லை. ஆனால் அனைத்துக்கும் சேர்த்து வளர்ந்தால் இருக்கு’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜாரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories