திருப்பதி கல்யாண உற்சவ பெரிய லட்டுகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதா?

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்திக்க சென்றார். அப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ரூ.200 விலை உள்ள 300 கல்யாண உற்சவ பெரிய லட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும், தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது. 300 பெரிய லட்டுக்களை விமானத்தில் எடுத்துச்செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்காததால் வேறு விமானத்தின் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதில் யாருடைய அனுமதியின் பேரில் 300 லட்டுகளை கொண்டு சென்றார். அந்த 300 லட்டுகளை யார் யாருக்கு கொடுத்தார். அதற்குண்டான பணத்தை யார் தேவஸ்தானத்திற்கு செலுத்துவது என்பன போன்ற கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு இருந்தது. ஆந்திரா முழுவதும் இந்த தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில்:- ஆந்திர முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின் பேரில் 30 கல்யாண உற்சவ லட்டுகளை மட்டுமே டெல்லிக்கு கொண்டு சென்று மரியாதை நிமித்தமாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும், 300 லட்டுக்கள் கொண்டு செல்லவில்லை எனவும் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து திருமலை 1 டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1713996 tirupatiladdu - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories