January 25, 2025, 3:07 PM
29 C
Chennai

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது நேர்மையான தேர்தல் இல்லை : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

tamilisai-soundararajan சென்னை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் நேர்மையாக நடைபெற்ற தேர்தல் இல்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது…. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 2016 தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என்று நம்பினோம். இன்னும் அதிகமான ஓட்டுகள் வாங்கி இருக்க வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது நேர்மறையான தேர்தல் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மிகப்பெரிய சுனாமி வீசியபோது 5 ஆயிரம் வாக்குகளை பெற்றது சாதாரண விஷயமல்ல. ஒரு கட்சி வெற்றியை தக்கவைக்க பணம் கொடுத்தது. இன்னொரு கட்சி டெபாசிட்டை தக்க வைக்க பணம் கொடுத்தது. இருவருமே போட்டி போட்டு பணத்தை கொட்டினார்கள். இது நோட்டால் வாங்கப்பட்ட வெற்றி என்பதும் தெரியும். வெற்றி பெற்றதும் உண்மையான குறியீடு இல்லை. தோல்வி அடைந்தவர்கள் பெற்றதும் உண்மையான குறியீடு கிடையாது. இந்த தொகுதியில் ஜெயலலிதா 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். ஆனால் வளர்மதி 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்காக ஜெயலலிதாவை விட வளர்மதி செல்வாக்கு மிக்கவர் என்று சொல்ல முடியுமா? ஊழலுக்கு எதிராக எல்லோரும் பேசும்போது ஒருவர்கூட தேர்தல் களத்தில் ஊழலுக்கு எதிராக போட்டியிட வரவில்லையே. ஆனால் நாங்கள் களத்தில் நின்றோம். நாங்கள் பெற்ற 5 ஆயிரம் வாக்குகள் ஊழலுக்கு எதிரான வாக்குகள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் பிரிந்து நின்றால் சாதிக்க முடியாது என்பதையும் உணர்ந்து இருக்கிறோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாற்று சக்தியாக எங்கள் அணி உருவெடுக்கும்.

  • இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.