மகனை கடத்திய மருமகள் வீட்டார்! மீட்க வேண்டி பெற்றோர் புகார்!

parent
parent

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தங்களது மகனை, கடத்திச்சென்று துன்புறுத்தும் மருமகள் வீட்டார் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம், பெற்றோர் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று பவானி லோகநாதன் ஹாஸ்பிடல் ரோடு பகுதியை சேர்ந்த யோகவேலு – இந்திராணி தம்பதியினர் வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், தங்களது மகன் நரேஷ் கிருஷ்ணாவுக்கு, வேலூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்ததாகவும், பின்னர் மருமகள் நடத்தை சரியில்லாததாலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்

மேலும், நீதிமன்றத்தில் விவாக ரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு முடிவெட்டும் கடைக்கு சென்ற நரேஷ் கிருஷ்ணாவை, மருமகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அடியாட்கள் தாக்கி, வேலூருக்கு கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுகுறித்து தங்களது புகாரின் பேரில் கோபி போலீசார், மருமகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு நரேஷ் கிருஷ்ணாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கூறியும், அவர்கள் ஒப்படைக்க வில்லை என்று கூறி உள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

மேலும், மருமகள் குடும்பத்தினர் தங்களது மகனை அடித்து சித்திரவதை செய்து பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களையும் வேலூருக்கு வரும்படி மிரட்டுவதாகவும், அவ்வாறு சென்றால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

எனவே போலீசார் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்தும், கடத்தப்பட்ட மகனை உயிருடன் மீட்டுத்தரவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories