மகனை கடத்திய மருமகள் வீட்டார்! மீட்க வேண்டி பெற்றோர் புகார்!

parent
parent

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தங்களது மகனை, கடத்திச்சென்று துன்புறுத்தும் மருமகள் வீட்டார் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம், பெற்றோர் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று பவானி லோகநாதன் ஹாஸ்பிடல் ரோடு பகுதியை சேர்ந்த யோகவேலு – இந்திராணி தம்பதியினர் வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், தங்களது மகன் நரேஷ் கிருஷ்ணாவுக்கு, வேலூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்ததாகவும், பின்னர் மருமகள் நடத்தை சரியில்லாததாலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்

மேலும், நீதிமன்றத்தில் விவாக ரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு முடிவெட்டும் கடைக்கு சென்ற நரேஷ் கிருஷ்ணாவை, மருமகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அடியாட்கள் தாக்கி, வேலூருக்கு கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுகுறித்து தங்களது புகாரின் பேரில் கோபி போலீசார், மருமகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு நரேஷ் கிருஷ்ணாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கூறியும், அவர்கள் ஒப்படைக்க வில்லை என்று கூறி உள்ளனர்.

மேலும், மருமகள் குடும்பத்தினர் தங்களது மகனை அடித்து சித்திரவதை செய்து பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களையும் வேலூருக்கு வரும்படி மிரட்டுவதாகவும், அவ்வாறு சென்றால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

எனவே போலீசார் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்தும், கடத்தப்பட்ட மகனை உயிருடன் மீட்டுத்தரவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Topics

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories