December 7, 2025, 3:09 AM
24.5 C
Chennai

தமிழகத்திலும் மாற்றம் வரும்-நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.சார்பில் தக்கலையிலுள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசானது வீட்டு வரியை உயர்த்தி மூச்சுவிடும் நேரத்தில் மின்சார கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால் மத்திய அரசு உயர்த்த சொன்னதால்தான் மின்கட்டணத்தை உயர்த்தினோம் என கூறுகிறார். மத்திய அரசானது எந்த காலகட்டத்திலும் எந்த அரசும் அப்படி சொல்லாது. தற்போது மத்திய அரசாங்கம் என்ன கூறியுள்ளது என்றால் தமிழகத்தில் 22 சதவீதம் லைன் லாஸ் ஆகிறது. அதை குறைக்க வேண்டும் அது போல் கடனையும் குறைப்பதற்காக முயற்சிக்கவேண்டும் என கூறியிருக்கிறார்கள். வீட்டு வரியை உயர்த்தவோ, மின்கட்டணத்தை உயர்த்தவோ மத்திய அரசாங்கம் கூறவில்லை.

தி.மு.க. அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றதை இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் நல்ல திட்டமான பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். இப்படி மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. இன்னும் இரண்டு வருடத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

786119 untitled 2 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories