அதிமுக இ.ஒ பதவியை ராஜினாமா செய்ததாக இபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்..?

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். அப்போது கட்சியை வழிநடத்தி செல்லும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்து விட்டோம். எனவே, சசிகலா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்தை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் உருவானது. எடப்பாடி தரப்பினர் கடந்த 11ம் தேதி கூட்டிய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தான் வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதினார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

மற்றொரு கடிதத்தில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எழுதினார். அதேபோன்று, ஓபிஎஸ்சும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், இதையே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் கடந்த புதன்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்த நிலையே  தொடரும் என்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து  இருவரும் இணைந்து செயல்படலாம் என இபிஎஸ்க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அதே நேரத்தில் பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் அனுப்பிய கடிதத்தை சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

முதல் கட்டமாக, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் தற்போது அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். அதாவது எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இதனால் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தான் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டதாக எழுதிய கடிதம், தற்போது எடப்பாடிக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

500x300 827908 chennaihighcourt 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories