அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் ..

Published:

images 2022 08 21T114026.963 - 2026

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை தன்பாத் இருந்து ஆலப்புழா சென்ற விரைவு ரெயில் வந்தது. இந்த ரெயில் பெட்டிகளில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்ததை கண்டு ரெயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த நபரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறக்கி, ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொண்டு வந்த பணம் மற்றும் நகைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், நாகராஜ் என்பவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தங்கம் வாங்கி வந்து கோவையில் தங்க வியாபாரம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்த அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கிலே கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img