சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக நகைகள் சரிபார்க்கும் பணி..

22cmp1 2208chn 111 71 - 2026

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் 2வது நாளாக இன்று நடந்தது.

உலக பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை ஆய்வுப்பணி என்பது நடந்து வருகிறது. நேற்று கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 3 துணை ஆணையர்கள் மற்றும் 3 நகை மதிப்பீட்டு வல்லுநர் குழுவினர் ஆய்வு நடத்தினர். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு மாலை 6 வரை நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2ம் நாளாக ஆய்வுப்பணிகள் தொடங்கியது.

நேற்று வந்த அதிகாரிகளே இன்றும் சோதனை மேற்கொள்ள உள்ளனர். கடலூர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று 2 நாளாக ஆய்வுகளை தொடங்கியுள்ளனர். நேற்று ஓராண்டிற்கான கணக்கை பார்த்த நிலையில், இன்று அதற்கு அடுத்த ஆண்டிற்கான கணக்குகள் பார்க்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2005ம் ஆண்டில் தான் நகை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு எவ்வித ஆய்வுப்பணிகளும் கோயிலில் மேற்கொள்ளப்படவில்லை.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இதனிடையே இடைப்பட்ட 17 ஆண்டுகளில் கோயிலுக்கு வந்த நகைகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளதால், குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் ஆய்வு பணிகள், மீண்டும் நாளை 3ம் நாளாக தொடங்கப்படும். இதேபோல் குறைந்தது 10 நாட்கள் ஆய்வு பணிகள் நடைபெறும். நடராஜர் கோயிலை பொறுத்தவரை இந்துசமய அறநிலையத்துறையின், சாதாரண மற்ற ஆய்வுகளுக்கு தான் தீட்சிதர்களின் அனுமதி மறுப்பு என நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியிருந்தனர்.

ஆனால் நகைகள் ஆய்வு என்பது 1955ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருவதால் நகை சரிபார்ப்பு ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். இதுவரை 10 முறை நகைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெறுவது 11வது முறை ஆய்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories