காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் விவகாரத்தில், அதற்கு தடை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பார்த்திபன் கேள்விக்கு பதிலளித்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 2 புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் தில்லி சென்று, பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று பார்த்திபன் சட்டமன்றத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசினார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தொடர்பான செய்திகள் வந்த உடனே, பிரதமருக்கு 2014 நவம்பர் 12-ஆம் தேதி கடிதம் ஒன்று எழுதினேன். அதில், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசின் எந்தவொரு பாசனத் திட்டத்துக்கும் மத்திய அரசின் சுற்றுச் சூழல்-வனங்கள் அமைச்சகமும் நீர் ஆதாரத் துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 2014 நவம்பர் 18-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசும் தெரிவித்தது. அதன் பிறகு, 2014 டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைத் தமிழக வழக்குரைஞர்களுடன் ஆலோசித்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

