ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் மீ்ண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று, 10-க்கும் மேற்பட்ட மீ்ன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், அதிகாலை நேரத்தி்ல் மீன்பிடித்து விட்டுத் திரும்பும் போது கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற் படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மீனவர்களி்ன் மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இரு தினங்களுக்கு முன்னர் மீனின் விஷக் கொடுக்கு தாக்கி படகில் மயங்கிக் கிடந்த தமிழக மீனவரை குளுகோஸ் ஏற்றி முதலுதவி செய்து காப்பாற்றி இலங்கைக் கடற்படையினர் திருப்பி அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

