கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள்..

images 91 1 - 2026

விநாயகர் சதுர்த்தி கோயில் விழாக்கள் காரணமாக கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு நகர்புறங்களுக்கு தினமும் 2200 பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதோடு முகூர்த்த நாளாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திருமணங்கள், சுபகாரியங்கள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. ஏ.சி. படுக்கை பெட்டியிலும் இடமில்லை. இதனால் காத்திருப்போர் பட்டியல் 300-க்கு மேலாக உள்ளது.

நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை மட்டுமின்றி பிற நகரங்களிலும் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை அரசு விடுமுறையாகும். அதனால் இன்று மாலையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு நகர் புறங்களுக்கு தினமும் 2200 பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தேவையை சமாளிக்க சிறப்பு பஸ்கள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை கூட்ட நெரிசலை சமாளிக்க தேவையான அரசு பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா தொடங்கி இருப்பதால் வேளாங்கண்ணிக்கும் தேவையான அளவு பஸ்களை இயக்குகிறோம். புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்களில் இடம் இல்லாததால் அரசு பஸ்களை நம்பி பயணம் செய்ய மக்கள் கூடுவார்கள். அதற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டுள்ளனர். மாலையில் இருந்து வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கோயம்பேடு பஸ் நிலையம் காலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories