சத்தீஷ்காரில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி..

IMG 20220830 113842 - 2026

சத்தீஷ்காரில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதில் நீரில் மூழ்கி பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

சத்தீஷ்காரின் கொரியா மாவட்டத்தில் ராம்தாஹா நீர்வீழ்ச்சி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதிக்கு சுற்றுலாவாக வந்த 7 பேர் கொண்ட குழு நீர்வீழ்ச்சியில் குளிக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி, அவர்கள் நீரில் இறங்கி சென்றுள்ளனர். இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில், நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அந்த பகுதியில் ஆழமும் அதிகளவில் இருந்துள்ளது. இதனை அறியாமல் குளிக்க சென்ற சுற்றுலாவாசிகள் நீரின் வேகத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டு உள்ளனர். காப்பாற்றும்படியும் கூச்சலிட்டு உள்ளனர். எனினும், நீரின் இரைச்சலால் அந்த சப்தம் கேட்கவில்லை.

இதன்பின்பு தகவல் அறிந்து மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில், நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார் என மாவட்ட மாஜிஸ்திரேட் குல்தீப் சர்மா கூறியுள்ளார்.

சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். அவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories